நடிகர் ரஜினிகாந்த் தனது தனிப்பட்ட காரணங்களுக்காகச் சென்னை விமான நிலையத்திலிருந்து மும்பைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக அவரிடம் நடிகர் அஜீத்குமாருக்குப் பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த ரஜினிகாந்த், அஜீத்குமாருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.