பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி என்று நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்து பேசியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சர்வதேச ஒலி, ஒளி கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஜம்மு- காஷ்மீரில் அமைதியையும், நாட்டிற்குப் பெருமையையும் பிரதமர் நரேந்திர மோடி நிச்சயம் கொண்டு வருவார் எனக் கூறினார்.