ஷாக் தந்த மின்கட்டணம் : சூரிய சக்திக்கு மாறிய பாஜக மாவட்ட அலுவலகம்!
Mar 16, 2026, 12:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஷாக் தந்த மின்கட்டணம் : சூரிய சக்திக்கு மாறிய பாஜக மாவட்ட அலுவலகம்!

Murugesan M by Murugesan M
May 2, 2025, 07:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முழுக்க முழுக்க சூரியசக்தி மின் உற்பத்தியின் மூலம் இயங்கும்  கோவை மாநகர மாவட்ட பாஜக அலுவலகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மற்ற அலுவலகங்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் கோவை மாநகர் பாஜக அலுவலகம் தொடர்பாகவும், அங்குப் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல் தொடர்பாகவும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

நாடு முழுவதும் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது மட்டுமின்றி மின்சாரத்துறையில் இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்யும் நோக்கத்தில் பிரதமரின் சூர்யோதயா யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.

இத்திட்டத்திற்கு மானியம் வழங்குவதோடு உபரி மின்சார உற்பத்திக்குக் கூடுதல் வருமானமும் கிடைக்கும் என்பதால் சூரிய ஒளி மின்சாரத்திட்டத்தை தேசிய இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் எண்ணம் நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

பிரதமரின் எண்ணத்தையும், நோக்கத்தையும் வலுப்படுத்தும் வகையில் அண்மையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் திறந்து வைக்கப்பட்ட கோவை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகம் முழுவதும் சூரிய ஒளி மின்சாரத்தின் மூலமாகவே இயங்கி வருகிறது. 25 செண்ட் பரப்பளவில் மூன்று தளங்களைக் கொண்டிருக்கும் இந்த அலுவலகத்தில் பொருத்தப்பட்ட சோலார் பேனல்களின் மூலம் சுமார் 10 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

சுமார் 7 லட்ச ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தில் அலுவலக பயன்பாட்டிற்குப் போக மீதமிருக்கும் மின்சாரத்தை மின்வாரியத்திற்கு விற்பனையும் செய்யப்படுகிறது.

பிரதமர் மோடியின் கனவை நினைவாக்கும் நோக்கத்தில் கோவை மாநகர, மாவட்ட பாஜக அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த சோலார் பேனல்கள் மற்ற கட்சி அலுவலகங்களுக்கு முன்னோடியாகக் காட்சியளிக்கின்றன.

இதன்மூலம் நாட்டிலேயே ஒரு கட்சி அலுவலகம் முழுவதுமாக சோலார் மின்சாரத்தில் இயங்கும் பெருமையைக் கோவை மாநகர பாஜக மாவட்ட அலுவலகம் பெற்றிருக்கிறது. அடிக்கடி உயர்த்தப்படும் மின் கட்டணத்தை அறவே தவிர்க்கவும், சொந்தமாக மின் உற்பத்தியைச் செய்யவும் உதவக்கூடிய இந்த மத்திய அரசின் சோலார் பேனல் திட்டம் அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

Tags: சூரியசக்தி மின் உற்பத்திsollarkovaitn bjpShocking electricity bill: BJP district office switches to solar powerகோவை மாநகர் பாஜக அலுவலகம்
ShareTweetSendShare
Previous Post

தகவல் தொழில்நுட்பத்தில் காவல்துறை பின்தங்கியுள்ளது : சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி!

Next Post

கங்கா விரைவு சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி சோதனை!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies