கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான மேக்னா ராஜ் தனது 2-வது திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இவர் நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தபோது கடந்த 2020-ம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் உயிரிழந்தார்.
இளம்வயதிலேயே கணவரை இழந்த மேக்னா ராஜ் 2-வது திருமணம் செய்து கொள்ளப்போவதாக வதந்திகள் வலம் வந்தன.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் சிரஞ்சீவி சர்ஜாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை மேக்னா ராஜ் பகிர்ந்துள்ளார்.
அதில் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீயே எனக்கு வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.