மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற 2வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, அர்ஜெண்டினாவின் ஆண்ட்ரஸ் மால்டேனி-மேக்சிமோ கோஜாலே ஜோடி உடன் மோதியது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் போபண்ணா ஜோடி 4-6, 7-6, 11-9 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.