காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவரது முதல் பட்டினப்பிரவேசத்தை மேற்கொண்டார்.
காஞ்சிபுரத்தில் உள்ள பழம்பெரும் காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காமாட்சி அம்மன் கோயிலில் இவருக்கு 70-வது மடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சந்நியாச தீக்ஷை வழங்கினார்.
தொடர்ந்து காஞ்சி சங்கர மடத்தில் சிறப்புப் பூஜைகள் மற்றும் ஆராதனையில் அவர் ஈடுபட்டார். இந்நிலையில், சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவரது முதல் பட்டினபிரவேசத்தை மேற்கொண்டார்.
சங்கர மடத்திலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுள்ள மகா பெரியவர் கோயிலுக்கு அவர் நடந்து சென்றார். சங்கர மடத்தின் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் புடைசூழ முக்கிய வீதிகள் வழியாக அவர் பட்டினபிரவேசம் மேற்கொண்டார்.