வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் பொதுவெளியில் திமுக கவுன்சிலர்கள் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
25-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் திமுகவை சேர்ந்த கணேஷ் சங்கர். 27 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் திமுகவை சேர்ந்த சதீஷ். இவர்கள் இருவரும் சத்துவாச்சாரியில் உள்ள RTO சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
அப்போது இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தன்னை அவதூறு பரப்புவதாக இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டனர்.