மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து சிகிச்சை பெற்று வந்த பெண்ணை உறவினர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவையாம்பாள்புரத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் தனது மகளை உறவினர் செல்வராஜ் என்பவர் கவனப்பில் விட்டுவிட்டு வெளிநாட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் ஜெயலட்சுமியின் மகளை உறவினர்கள் கண்டித்ததால், செல்வராஜை செல்போனில் தொடர்பு கொண்டு ஜெயலட்சுமி திட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 30-ஆம் தேதி சொந்த ஊர் திரும்பிய ஜெயலட்சுமியிடம் செல்வாராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கி உள்ளார்.
இதில் காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இச்சம்பவம் குறித்து புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த செல்வராஜ் மற்றும் அவரது மகன் மருத்துவமனைக்குள் புகுந்து மீண்டும் தாக்கி உள்ளனர்.
இது தொடர்பான காட்சிகள் வைரலான நிலையில், செல்வராஜ் மற்றும் சூர்யாவை போலீசார் கைது செய்தனர்.