ஜம்மு – காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 9வது நாளாக அத்துமீறித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி வருகிறது.
இந்தநிலையில், 9-வது நாளாக ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, உரி, அக்னூர் உள்ளிட்ட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. அத்துமீறித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.