நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று நடைபெறுகிறது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ், சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வை ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது.
2025-26-ம் கல்வியாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது.
தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 23 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுத உள்ளனர்.
இதற்காக தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை உட்பட மொத்தம் 31 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன