ராஜஸ்தானில் உள்ள சர்வதேச எல்லை வழியாக ஊருடுவ முயன்ற பாகிஸ்தான் ரேஞ்சரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
கடந்த 10 நாட்களாகச் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது.
சிறிய ரக ஆயுதங்களைக் கொண்டு பாகிஸ்தான் நடத்தி வரும் தொடர் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், ராஜஸ்தானில் உள்ள சர்வதேச எல்லை வழியாக ஊருடுவ முயன்ற பாகிஸ்தான் ரேஞ்சரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு பஞ்சாப் சர்வதேச எல்லையைத் தற்செயலாகக் கடந்ததற்காக பாதுகாப்புப் படை வீரர் சாஹு பாகிஸ்தான் ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.