இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில், பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் 2வது முறையாக நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்தும், எல்லையில் நடைபெற்று வரும் முன்னேற்றங்கள் குறித்தும் பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங் மற்றும் பாதுகாப்பு செயலாளருடன் பிரதமர் மோடி தனித்தனியாக ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.