திருவண்ணாமலையில் முன்விரோதம் காரணமாக திமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகேயுள்ள க்கம்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் திருமலை. திமுக பிரமுகரான இவரது மனைவி முன்னாள் ஊராட்சிமன்ற தலைவராகப் பொறுப்பு வகித்தவர்.
இவர்களுக்குக் குமரன் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ள நிலையில், திருமலைக்கு அவரது உறவினருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கனிமவள வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, திருமலை தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது சோழவரம் அருகே திருமலையை பின் தொடர்ந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற கும்பல், அவரை பின்னாலிருந்து அரிவாளால் கழுத்தில் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
இதில் நிலை தடுமாறி விழுந்த திருமலை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த தூசி போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.