அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தி வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
அறத்தின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது என்று அண்ணாமலை தெரிவித்தார்.
பாகிஸ்தான் இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொலை செய்துள்ளனர் என்றும் துணை ஆட்சியர் நிலையில் உள்ள அதிகாரியையும் கொலை செய்துள்ளனர் என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
டிரோன்களை நமது நாட்டுக்குள் அனுப்பித் தாக்குதல் நடத்திய உள்ளனர் என்றும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் செய்த தவற்றுக்குப் பாகிஸ்தானில் இருக்கக்கூடிய தீவிரவாதிகள் மீது மட்டும் இந்தியா தாக்குதல் நடத்துகின்றது என்று அவர் கூறினார்.
பாகிஸ்தான், இந்தியாவில் உள்ள அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது கூறியவர், இந்தியா மிகப் பெரிய பொருளாதார நாடு. இந்தியாவின் பொருளாதாரத்தில் 12 ல் ஒரு பங்கு தான் பாகிஸ்தான் பொருளாதாரம் என்று அவர் குறிப்பிட்டார்.
நாம் எந்த நாட்டின் எல்லையைப் பிடிப்பதற்காகச் சண்டை போடவில்லை என்றும் நமது நாட்டு மீது நடத்தப்பட்டுள்ள தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துகிறோம் என அவர் தெரிவித்தார்.
இந்தப் போர் இன்றோ, நாளையோ முடிவடையப் போவது கிடையாது என்றும் இந்தப் போர் தீவிரவாதத்திற்கு எதிரான நடக்கிறது. இது இப்போது முடியாது என அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்தியாவின் நடவடிக்கை பார்த்த பிறகு பாகிஸ்தான் இந்தியாவில் ஓர் உயிரை எடுப்பதற்குப் பயப்பட வேண்டும் என்றும் பாகிஸ்தான் நாடு பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் பாகிஸ்தானில் நாட்டுக்கு என்று ராணுவம் அல்ல, ராணுவத்திற்கு ஒரு நாடு. ராணுவம் தான் அந்த நாட்டு அரசைக் கட்டுப்படுத்துகிறது என்றும் அரசின் கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் இல்லை என அவர் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ராணுவ வீரர்களுக்காக முன்னெடுக்கும் பேரணி வரவேற்கத்தக்கது என்றும் அதே நேரத்தில் முதல்வரும் இந்திய அரசுக்கு இந்த நேரத்தில் தனது முழு ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தினார்.
தமிழக அரசு 4 ஆண்டு சாதனை கொண்டாடுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, தமிழகத்தில் வேதனையான நான்காண்டுகள் என்றும் தமிழகத்தின் பொருளாதாரத்தில் நாம் பின் நோக்கிச் செல்கிறோம் என்று அண்ணாமலை தெரிவித்தார்.