கெஞ்சி கடன் பெற்ற பாகிஸ்தான் : பாம்புக்குப் பால் வார்த்த IMF - உலக நாடுகள் அதிர்ச்சி!
Aug 20, 2025, 06:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கெஞ்சி கடன் பெற்ற பாகிஸ்தான் : பாம்புக்குப் பால் வார்த்த IMF – உலக நாடுகள் அதிர்ச்சி!

Web Desk by Web Desk
May 12, 2025, 02:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் கடுமையான எதிர்ப்பையும்  மீறி பாகிஸ்தானுக்கு  8,542 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு IMF ஒப்புதல் அளித்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

நெருக்கடியில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கப் பாகிஸ்தான், சர்வதேச நிதி ஆணையத்தில்  கடன் கேட்டிருந்தது. இது தொடர்பான சர்வதேச நிதி  ஆணைய கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது.

IMF நிதியைப் பாகிஸ்தான் எப்போதுமே முறையாகப் பயன்படுத்தியதில்லை. மேலும், கடன்பெறும்  நிதியைப் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்குப் பயன்படுத்தக் கூடும் என்று இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் பாகிஸ்தானுக்குக் கடன் வழங்குவது தொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு 8542 கோடி ரூபாய் கடன் வழங்க IMF ஒப்புதல் வழங்கி உள்ளது. பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் கடன் நிதி, ஜம்மு காஷ்மீரை அழிக்கும் பயங்கர வாதத்துக்குப் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா,சர்வதேச நிதி ஆணையத்தின் இந்த முடிவைக் கண்டித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் நாடு தத்தளிக்கும்போதே, எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், பாகிஸ்தான் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. IMF-ன் கடன் ஒப்புதல் கையெழுத்தின் மை காய்வதற்குள், இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.

மேலும், ரஜோரி, பூஞ்ச், உரி, டாங்தார், உட்பட ஜம்மு காஷ்மீரில் உள்ள பல பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. அத்துமீறும் பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்தியா வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

1958-ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் சர்வதேச நிதி ஆணையத்திடம் கடன் வாங்கி வருகிறது. 1989 ஆம் ஆண்டில் இருந்து கிட்டத் தட்ட 35 ஆண்டுகளில் 28 ஆண்டுகள் IMF பாகிஸ்தானுக்குக் கடன் வழங்கியுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாகிஸ்தானின் 4 முக்கிய திட்டங்களுக்கு IMF கடன் வழங்கியுள்ளது. ஏற்கெனவே வாங்கிய நிதியில் குறிப்பிட்ட திட்டங்களை முறையாகச் செயல்படுத்தி இருந்தாலே, இன்னொரு முறை   கடன் கேட்கும் நிலைக்குப் பாகிஸ்தான் வந்திருக்காது.

தொடர்ந்து கடன் பெற்றுவரும் பாகிஸ்தான், மீண்டும் மீண்டும் பொருளாதார சரிவைச் சந்தித்து, கடனைத் திரும்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளது. பாகிஸ்தானின் அரசில்  இராணுவத்தின் தலையீடு அதிகமாக உள்ளது. நாட்டில் எந்த பொருளாதார செயல் திட்டங்கள் எதுவும் நடைமுறைக்கு வருவதில்லை. பாகிஸ்தானின் மொத்த பட்ஜெட்டில் ராணுவத்திற்கான  செலவுகளே  அதிகமாகும். இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டிலும் ராணுவத்துக்கான ஒதுக்கீட்டைப் பாகிஸ்தான் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

தொடர்ந்து, உலகளாவிய பயங்கரவாதத்துக்கு ஆதரவாக இருக்கும் பாகிஸ்தானுக்கு இவ்வளவு பெரிய நிதி கிடைத்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த நிதியை வைத்துக் கொண்டு,   இந்தியாவுக்கு எதிரான போரைப் பாகிஸ்தான் தீவிரப் படுத்தும் வாய்ப்புள்ளதாக  புவிசார் அரசியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags: India opposes IMF loan to PakistanPakistan received a loan by begging: IMF milks the snakeshocking the worldஉலக நாடுகள் அதிர்ச்சிIMFtamil janam tv
ShareTweetSendShare
Previous Post

ஆசஸ் விவோபுக் S14, விவோபுக் S14 ஃபிளிப் அறிமுகம்!

Next Post

ஈரோடு : விடுமுறை தினத்தையொட்டி கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Related News

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் கடும் அமளிக்கிடையே தாக்கல்!

முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல்!

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

Load More

அண்மைச் செய்திகள்

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

உக்ரைனின் புதிய Flamingo ஏவுகணை!

டெல்லி : 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

சென்னை மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies