கெஞ்சி கடன் பெற்ற பாகிஸ்தான் : பாம்புக்குப் பால் வார்த்த IMF - உலக நாடுகள் அதிர்ச்சி!
May 10, 2025, 10:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கெஞ்சி கடன் பெற்ற பாகிஸ்தான் : பாம்புக்குப் பால் வார்த்த IMF – உலக நாடுகள் அதிர்ச்சி!

Web Desk by Web Desk
May 10, 2025, 09:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் கடுமையான எதிர்ப்பையும்  மீறி பாகிஸ்தானுக்கு  8,542 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு IMF ஒப்புதல் அளித்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

நெருக்கடியில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கப் பாகிஸ்தான், சர்வதேச நிதி ஆணையத்தில்  கடன் கேட்டிருந்தது. இது தொடர்பான சர்வதேச நிதி  ஆணைய கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது.

IMF நிதியைப் பாகிஸ்தான் எப்போதுமே முறையாகப் பயன்படுத்தியதில்லை. மேலும், கடன்பெறும்  நிதியைப் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்குப் பயன்படுத்தக் கூடும் என்று இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் பாகிஸ்தானுக்குக் கடன் வழங்குவது தொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு 8542 கோடி ரூபாய் கடன் வழங்க IMF ஒப்புதல் வழங்கி உள்ளது. பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் கடன் நிதி, ஜம்மு காஷ்மீரை அழிக்கும் பயங்கர வாதத்துக்குப் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா,சர்வதேச நிதி ஆணையத்தின் இந்த முடிவைக் கண்டித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் நாடு தத்தளிக்கும்போதே, எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், பாகிஸ்தான் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. IMF-ன் கடன் ஒப்புதல் கையெழுத்தின் மை காய்வதற்குள், இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.

மேலும், ரஜோரி, பூஞ்ச், உரி, டாங்தார், உட்பட ஜம்மு காஷ்மீரில் உள்ள பல பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. அத்துமீறும் பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்தியா வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

1958-ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் சர்வதேச நிதி ஆணையத்திடம் கடன் வாங்கி வருகிறது. 1989 ஆம் ஆண்டில் இருந்து கிட்டத் தட்ட 35 ஆண்டுகளில் 28 ஆண்டுகள் IMF பாகிஸ்தானுக்குக் கடன் வழங்கியுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாகிஸ்தானின் 4 முக்கிய திட்டங்களுக்கு IMF கடன் வழங்கியுள்ளது. ஏற்கெனவே வாங்கிய நிதியில் குறிப்பிட்ட திட்டங்களை முறையாகச் செயல்படுத்தி இருந்தாலே, இன்னொரு முறை   கடன் கேட்கும் நிலைக்குப் பாகிஸ்தான் வந்திருக்காது.

தொடர்ந்து கடன் பெற்றுவரும் பாகிஸ்தான், மீண்டும் மீண்டும் பொருளாதார சரிவைச் சந்தித்து, கடனைத் திரும்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளது. பாகிஸ்தானின் அரசில்  இராணுவத்தின் தலையீடு அதிகமாக உள்ளது. நாட்டில் எந்த பொருளாதார செயல் திட்டங்கள் எதுவும் நடைமுறைக்கு வருவதில்லை. பாகிஸ்தானின் மொத்த பட்ஜெட்டில் ராணுவத்திற்கான  செலவுகளே  அதிகமாகும். இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டிலும் ராணுவத்துக்கான ஒதுக்கீட்டைப் பாகிஸ்தான் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

தொடர்ந்து, உலகளாவிய பயங்கரவாதத்துக்கு ஆதரவாக இருக்கும் பாகிஸ்தானுக்கு இவ்வளவு பெரிய நிதி கிடைத்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த நிதியை வைத்துக் கொண்டு,   இந்தியாவுக்கு எதிரான போரைப் பாகிஸ்தான் தீவிரப் படுத்தும் வாய்ப்புள்ளதாக  புவிசார் அரசியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags: IMFIndia opposes IMF loan to PakistanPakistan received a loan by begging: IMF milks the snakeshocking the worldஉலக நாடுகள் அதிர்ச்சி
ShareTweetSendShare
Previous Post

சீறும் இந்திய ராணுவம் : காலாவதியான சீன ஆயுதங்கள் – திணறும் பாகிஸ்தான்!

Related News

சீறும் இந்திய ராணுவம் : காலாவதியான சீன ஆயுதங்கள் – திணறும் பாகிஸ்தான்!

ஆபரேஷன் சிந்தூர் 2.0 : பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடித்த இந்தியா!

ஆப்ரேஷன் சிந்தூர் – யார் இந்த கர்னல் சோபியா குரேஷி?

உதார் விடும் பாகிஸ்தான் : திவாலாகும் பொருளாதாரம் – சாப்பாட்டுக்கே வழியில்லை!

இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 தீவிரவாதிகள் உயிரிழப்பு!

பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு தலிபான் அரசு மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கெஞ்சி கடன் பெற்ற பாகிஸ்தான் : பாம்புக்குப் பால் வார்த்த IMF – உலக நாடுகள் அதிர்ச்சி!

அறத்தின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது : அண்ணாமலை

குடியரசுத் தலைவரின் சபரிமலைப் பயணம் ரத்து!

போர் நிறுத்தத்திற்கு இந்தியா – பாகிஸ்தான் ஒப்புதல் : அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

எத்தனை ஆண்டுகளானாலும் பாக். எண்ணம் தோல்வியில்தான் முடியும் : காங்கிரஸ் எம்பி சசி தரூர் 

தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதி!

டெல்லி : 60 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து!

சேலம் : முறையாக குடிநீர் வழங்க கோரி பெண்கள் சாலை மறியல்!

எல்லையோர மாநிலங்களில் மின்சாரம் துண்டிப்பு!

பயங்கரவாத செயல் இந்தியாவிற்கு எதிரான போர் நடவடிக்கையாக கருதப்படும் : இந்திய அரசு தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies