மலையாள நடிகர் விநாயகன் மீண்டும் குடி போதையில் ரகளையில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே பிரபல இயக்குனர் இயக்கத்தில் புதிய படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த படத்தில் நடிகர்கள் ஜெய சூர்யா, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்து கொல்லத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்குச் சென்ற விநாயகன் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டார். இதனால் அவரை கைது செய்த போலீசார், பின்னர் அவரை ஜாமினில் விடுவித்தனர்.