சென்னையில் முப்படை வீரர்களின் நலம் காக்க வேண்டி பாஜக சார்பில் அகோர ருத்ர யாகம் நடைபெற்றது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டது. இதில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி இந்தியா வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் பணியாற்றி வரும் முப்படை வீரர்களின் நலனுக்காகச் சென்னையில் அகோர ருத்ர யாகம் நடத்தப்பட்டது. பாஜக சார்பில் நடத்தப்பட்ட இந்த யாகத்தில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.