இந்தியாவிற்கு அண்மையில் உள்ள திபெத் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவாகியுள்ளது.
அதிகாலை பூமிக்கு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அப்பகுதியின் பல இடங்களில் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிரிழப்போ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இப்பகுதியில் கடந்த 8-ம் தேதி 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.