இலங்கையில் நடைபெற்ற மகளிர் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்கள் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா 101 பந்துகளில் 116 ரன்கள் விளாசி அசத்தினார். தொடர்ந்து 343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 48.2 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 97 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.