இந்திய விமானப்படையின் துல்லியமான தாக்குதல் பாகிஸ்தான் எதிர்பாராத ஒன்று என மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், போர் நிறுத்தம் என்பது தற்காலிகமானது எனக் கூறினார்.
பாகிஸ்தானின் அணுகுமுறையைப் பார்த்த பிறகே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே, இந்தியா எதற்கும் தயாராக இருப்பதாகக் கூறினார்.