உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆர்.கவாய் இன்று பதவியேற்கிறார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சஞ்சீவ் கன்னா ஓய்வு பெற்றார். இந்நிலையில், புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்கவுள்ளார்.
இதன் மூலம் நீதித்துறைக்கு தலைமை தாங்கும் முதல் புத்த மதத்தவர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.