சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக வரும் 19ஆம் தேதி வரை திறந்திருக்கும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
பிரசித்தி பெற்ற சபரிமலையில் மலையாள மாதத்தின் “எடவம்” மற்றும் தமிழ் மாதத்தின் “வைகாசி” மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. சபரிமலை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் தலைமையில் மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து கற்பூர ஆழியில் தீபம் ஏற்றுகிறார்.
நெய் அபிஷேகம் துவங்கி வழக்கமான பூஜைகள் நடக்கும். தினமும் இரவு 10.30 மணிக்கு ஹரிவராசனம் பாடி திருநடை அடைக்கப்படும். வழக்கமான ஐந்து நாள் மாதாந்திர பூஜைக்கு பின் மே 19 ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை சார்த்தப்படும்.
இதற்காக பக்தர்கள், www.sabarimala.org.in என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் போர் சூழலால் வரும் 19ம் தேதி குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வின் சபரிமலை வருகை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது.