கத்தார் நாட்டில் பட்டம் விடும் திருவிழா தொடர்ந்து வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பழைய தோஹா துறைமுகம் அருகே நடைபெற்ற இந்த பட்டத் திருவிழாவில் பல வண்ணங்களில் வித விதமான பட்டங்கள் வானை வட்டமிட்டு அலங்கரித்தன.
ஆரவாரத்திற்கிடையே கோலாகலமாக நடைபெற்ற இந்த பட்ட திருவிழாவை அங்குக் கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்து மகிழ்ந்தனர். இதனைப் பார்ப்பதற்காக வெளிநாட்டுப் பயணிகளும் குவிந்தனர்.