தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் உடலில் சேற்றைப் பூசி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
சோழபுரத்தில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது.
தொடர்ந்து நாள்தோறும் கோயிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்ட நிலையில் சேற்றுத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று உடலில் சேற்றைப் பூசி நேர்த்திக்கடன் செலுத்தினார்.