காட்சிப் பொருளான இ-சேவை மையங்கள் - சிறப்பு தொகுப்பு!
Aug 7, 2026, 02:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காட்சிப் பொருளான இ-சேவை மையங்கள் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
May 15, 2025, 07:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசு நிர்வாகத்தின் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட இ-சேவை மையங்கள் மக்களுக்கு எந்தவகையிலும் உதவ முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் காட்சிப் பொருளாக மாறியிருக்கும் இ சேவை மையங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அரசு நிர்வாகத்தின் சேவை பொதுமக்களுக்கு எளிதிலும், விரைவாகவும் கிடைக்கும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது தான் இந்த இ-சேவை மையங்கள். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியோடு மின்னணு ஆளுமைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இ-சேவை மையங்கள் உருவாக்கப்பட்டன.

தமிழகத்தின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் உட்பட சுமார் 14 ஆயிரத்திற்கும் இடங்களில் செயல்பட்டு வரும் இ -சேவை மையங்களில் தங்களுக்கான சேவைகள் அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை எனப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்

இ சேவை 2.0 எனும் பெயரில் அந்த சேவை மையங்களை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டாலும் கொரானோ தொற்று பரவலால் தொடங்கப்பட்ட வேகத்திலேயே அம்மையங்கள் படிப்படியாக மூடப்பட்டன. ஒரே இடத்தில் தங்களுக்குச் சேவையான அனைத்து சேவைகளும் கிடைக்கும் என நம்பி இ -சேவை மையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு ஏமாற்றமும் மன உளைச்சலுமே மிஞ்சுகிறது.

பல இடங்களில் இ சேவை மையங்கள் மூடப்பட்டிருப்பதால் ஒருசில இடங்களில் இருக்கும் இ சேவை மையங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து சேவையைப் பெற வேண்டியுள்ளது. அதிலும் விரைவில் பள்ளி தொடங்கவிருக்கும் நிலையில் ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஆதார் கார்டுகளை பெற இ – சேவை மையங்களை நாடும் நிலையில் கணினி பழுது, நெட்வொர்க் சேவை பாதிப்பு எனத் தொழில்நுட்பக் கோளாறுகளும் சேவை பெறுவதில் சிக்கலை ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

மக்களுக்குச் சேவை வழங்குவதற்காகத் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மக்களுக்கு எந்தவித பயனையும் அளிக்க முடியாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறது. தொடங்கப்பட்ட நோக்கத்தையே மறக்கும் அளவிற்குத் தள்ளப்பட்டுள்ள இந்த இ-சேவை மையங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி அதனைச் சீரமைக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

Tags: E-Service Centers as a showcase - Special Collectionஇ-சேவை மையங்கள்tn e seva
Share
Tweet
SendShare
Previous Post

விளாத்திக்குளம் அருகே பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழா : உடலில் சேற்றை பூசி நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள்!

Next Post

ஆமை வேகம்…அலட்சியம் : மெட்ரோ ரயில் பணிகளால் தீரா துயரத்தில் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies