திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கீழ்க்கொடுங்கலூர் கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான ஹரிஷ் குமார், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். அவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறலால் ஹரிஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவருக்கு காய்ச்சல் இருந்ததாகவும், டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மாணவனின் உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், மாணவருடன் படிக்கும் சக மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தவும், சொந்த கிராமத்தில் மருத்துவ முகாம் அமைக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















