அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் நடந்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ஓராண்டு காலத்திலேயே ஆட்சி மாறும் என இபிஎஸ் கூறுகிறார் – அது எப்படி மாறும்? என கேள்வி எழுப்பினார்.
47 எம்எல்ஏக்களில் 25 பேர் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்றும் 7 பேர் ராஜினாமா செய்துவிட்டனர் என்றும் தெரிவித்தார்.
திமுகவுடன் கூட்டணி வைத்து வெற்றிபெற்று ஆட்சியமைக்கலாம் என சிலர் கனவு காண்கின்றனர் என்றும் செங்கோட்டையன் விமர்சித்தார்.
















