குவியும் சுற்றுலாப்பயணிகள் : போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் அவதி!
Jan 14, 2026, 04:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குவியும் சுற்றுலாப்பயணிகள் : போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் அவதி!

Murugesan M by Murugesan M
May 16, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோடைக் காலம் உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில் உதகைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. போதுமான பேருந்துகள் இல்லாத காரணத்தினால், பொதுமக்களும் சுற்றுலாப்பயணிகளும் பேருந்து நிலையத்திலேயே ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகத் திகழக்கூடிய நீலகிரி மாவட்டம் உதகை உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளும் விரும்பக் கூடிய சுற்றுலாத்தலமாகத் திகழ்ந்து வருகிறது.

அதோடு கோடைக்கால மலர்க்கண்காட்சியும் தொடங்கியிருப்பதால் உதகையை நோக்கி வரக்கூடிய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற போதுமான பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தினால் உதகைக்குச் செல்லும் பயணிகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் பேருந்து நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

ஏற்கனவே நீலகிரி மாவட்டத்திற்குள் செல்ல சுற்றுலா வாகனங்களுக்கு இ – பாஸ் நடைமுறை அமலில் இருக்கும் நிலையில், போதுமான பேருந்துகள் இயக்கப்படாமல் இருப்பது பொதுப்போக்குவரத்தை நம்பியிருக்கும் சுற்றுலாப்பயணிகளை மிகுந்த அதிருப்தியடைச் செய்துள்ளது.

சுற்றுலாவுக்கு வருவோர் ஒருபுறம் இருக்கச் சொந்த காரணங்கள் உட்பட பல்வேறு காரணங்களுக்காகச் செல்லும் பொதுமக்களும், குறைந்த அளவில் இயக்கப்படும் பேருந்துகளில் படியில் நின்று கொண்டு ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்

உதகை மலர்க் கண்காட்சியைக் கணக்கில் கொண்டு அடுத்தடுத்து வரும் நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்துத்துறை போதுமான பேருந்துகளை இயக்கி அவர்களின் பயணத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: சுற்றுலாootyதமிழகத்தில் கோடைக் காலம்கோடைக் காலம்Tourists flocking: Concerns over insufficient government buses
ShareTweetSendShare
Previous Post

கடும் விலை சரிவு : வாழ்வாதாரத்தை இழந்த இலவம் பஞ்சு விவசாயிகள்!

Next Post

டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகனிடம் நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை நிறைவு!

Related News

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies