குவியும் சுற்றுலாப்பயணிகள் : போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் அவதி!
Jul 1, 2025, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குவியும் சுற்றுலாப்பயணிகள் : போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் அவதி!

Web Desk by Web Desk
May 16, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோடைக் காலம் உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில் உதகைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. போதுமான பேருந்துகள் இல்லாத காரணத்தினால், பொதுமக்களும் சுற்றுலாப்பயணிகளும் பேருந்து நிலையத்திலேயே ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகத் திகழக்கூடிய நீலகிரி மாவட்டம் உதகை உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளும் விரும்பக் கூடிய சுற்றுலாத்தலமாகத் திகழ்ந்து வருகிறது.

அதோடு கோடைக்கால மலர்க்கண்காட்சியும் தொடங்கியிருப்பதால் உதகையை நோக்கி வரக்கூடிய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற போதுமான பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தினால் உதகைக்குச் செல்லும் பயணிகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் பேருந்து நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

ஏற்கனவே நீலகிரி மாவட்டத்திற்குள் செல்ல சுற்றுலா வாகனங்களுக்கு இ – பாஸ் நடைமுறை அமலில் இருக்கும் நிலையில், போதுமான பேருந்துகள் இயக்கப்படாமல் இருப்பது பொதுப்போக்குவரத்தை நம்பியிருக்கும் சுற்றுலாப்பயணிகளை மிகுந்த அதிருப்தியடைச் செய்துள்ளது.

சுற்றுலாவுக்கு வருவோர் ஒருபுறம் இருக்கச் சொந்த காரணங்கள் உட்பட பல்வேறு காரணங்களுக்காகச் செல்லும் பொதுமக்களும், குறைந்த அளவில் இயக்கப்படும் பேருந்துகளில் படியில் நின்று கொண்டு ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்

உதகை மலர்க் கண்காட்சியைக் கணக்கில் கொண்டு அடுத்தடுத்து வரும் நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்துத்துறை போதுமான பேருந்துகளை இயக்கி அவர்களின் பயணத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: சுற்றுலாootyதமிழகத்தில் கோடைக் காலம்கோடைக் காலம்Tourists flocking: Concerns over insufficient government buses
ShareTweetSendShare
Previous Post

கடும் விலை சரிவு : வாழ்வாதாரத்தை இழந்த இலவம் பஞ்சு விவசாயிகள்!

Next Post

டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகனிடம் நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை நிறைவு!

Related News

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

திண்டுக்கல் : தீவிர சோதனைக்கு பிறகு குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களுக்கு அனுமதி!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

மதுரை : சம்பள உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

தென்காசி : பாலத்தை சீரமைத்து தரக்கோரி சடலத்துடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானால் யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் தொடங்க முடியும் : சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் க்ரோசி!

அமெரிக்கா : இசை நிகழ்ச்சியின் போது அந்தரத்தில் தொங்கிய பாடகி பியான்ஸ்!

காசா : குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

இஸ்ரேல் தாக்குதல் : காசாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

திருப்பூர் : ரேஷன் அட்டைதாரர்களுக்கு முறையாக பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை – மக்கள் புகார்!

வங்கதேசத்தில் இந்து பெண் பாலியல் வன்கொடுமை : 5 பேர் கைது!

கர்நாடகா : ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல்!

லாக்கப் மரணம் விவகாரம் – மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தக் கோரி கடிதம்!

WI-க்கு எதிரான 2வது டெஸ்டில் களமிறங்கும் ஸ்மித்!

திருப்புவனம் லாக்கப் மரண வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies