கடும் விலை சரிவு : வாழ்வாதாரத்தை இழந்த இலவம் பஞ்சு விவசாயிகள்!
Jun 17, 2025, 05:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடும் விலை சரிவு : வாழ்வாதாரத்தை இழந்த இலவம் பஞ்சு விவசாயிகள்!

Web Desk by Web Desk
May 16, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்படும் இலவம்பஞ்சின் விலை அடிமட்டத்திற்கு இறங்கியிருப்பதால் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை அம்மாவட்ட மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. தேனி மாவட்டத்தில் உற்பத்தியாகி வெளிநாடு வரை ஏற்றுமதி செய்யப்படும் இலவம் பஞ்சு குறித்தும், அதன் விலை இறக்கம் பற்றியும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ரம்மியமான சூழலில் அமைந்திருக்கும் தேனி மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயமே திகழ்ந்து வருகிறது. அத்தகைய மாவட்டத்தில் நான்கு திசைகளும் மலைப்பகுதியை உள்ளடக்கிய கடமலை – மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

தென்னை, முருங்கை, இலவம்பஞ்சு, அவரை, கப்பைக் கிழங்கு உள்ளிட்டவைகளோடு, இலவம் பஞ்சு விவசாயமும் பிரதானமாக விளங்கிவருகிறது. இங்கிருந்து உருவாக்கப்படும் இலவம் பஞ்சுகளின் மெத்தை மற்றும் தலையணைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில் அதன் விலையோ அதளபாதாளத்திற்கு சென்றிருக்கிறது.

கடந்தாண்டு 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒருகிலோ இலவம்பஞ்சு நடப்பாண்டும் அதிக விலைக்கு விற்பனையாகும் என நம்பி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு தற்போது மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிலோ இலவம்பஞ்சு 40 ரூபாய்க்கும் கீழே விற்பனையாவதால் அதனைப் பறிக்காமல் மரத்திலேயே விட்டு விடும் சூழலுக்கு அப்பகுதி விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இலவம்பஞ்சை எடுக்கும் ஆண்களுக்கு ஆயிரம் ரூபாய் கூலியும், பஞ்சை பிரித்துத் தரும் பெண்களுக்கு 400 ரூபாயும் கூலியாக வழங்கப்படும் நிலையில், சாகுபடிக்குச் செய்த செலவைக் கூட எடுக்க முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மகசூல் கொடுக்கும் இந்த இலவம் பஞ்சு விவசாயம் இந்த ஆண்டு ஏமாற்றத்தைக் கொடுத்திருப்பதால் அடுத்த ஆண்டு சாகுபடி செய்யும் எண்ணத்தையும் விவசாயிகள் கைவிடத் தொடங்கியுள்ளனர். எனவே தேனி மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தலையிட்டு இலவம்பஞ்சுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: இலவம் பஞ்சு விலை சரிவுtn agricultureவிவசாயிகள்Severe price drop: Low-income farmers lose their livelihoodஇலவம்பஞ்சு விவசாயிகள்
ShareTweetSendShare
Previous Post

AI வரமா? சாபமா? : இன்னும் 2 ஆண்டுகளில் காணாமல் போகும் வேலைகள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

குவியும் சுற்றுலாப்பயணிகள் : போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் அவதி!

Related News

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

தஞ்சையில் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது- அண்ணாமலை கண்டனம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவு நீர் – சாலையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்!

பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது – அன்புமணி ராமதாஸ்

மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசிதழில் வெளியீடு!

வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே மோதல் – மாணவர்களின் கல்வி கேள்விக்குறி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies