AI வரமா? சாபமா? : இன்னும் 2 ஆண்டுகளில் காணாமல் போகும் வேலைகள் - சிறப்பு தொகுப்பு!
Sep 20, 2026, 03:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

AI வரமா? சாபமா? : இன்னும் 2 ஆண்டுகளில் காணாமல் போகும் வேலைகள் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
May 16, 2025, 07:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

AI  காரணமாக இன்னும் 24 மாதங்களில், பல்வேறு துறைகளில் பல வேலைகள் வேகமாக மறைந்து போகப் போகிறது. எந்த எந்த வேலைகள் இல்லாமல் போகும்?  இந்த ஆபத்தான சூழலில், யாரால் வேலையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சர்வம் AI மயம் என்ற நிலையில், AI தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. சுகாதாரம், சில்லறை விற்பனை தொடங்கி, படைப்பாற்றல், நிதி, சுகாதார  உட்பட அனைத்து துறைகளிலும்  AI வந்து விட்டது. ஏற்கெனவே, 2030ம் ஆண்டுக்குள், உலகளவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வேலைகள் AI-யால்  கைப்பற்றப்படலாம் என்று McKinsey மெக்கின்சி நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஏதோ வெறும் தொழிற்சாலை வேலைகளை மட்டும் AI காலி செய்யும் என்றில்லை. எல்லாத் துறைகளிலும் AI- ஆல்  பல வேலைகள் மறைந்து போகும் என்று பட்டியலிடப்பட்டுள்ளன. இந்நிலையில், AI தொழில்நுட்ப நிபுணரும் தொழில்நுட்ப மேம்பாட்டு  நிறுவனமான (Replit) ரெப்லிட்டின் நிறுவனருமான  ((Amjad Masad)) அம்ஜத் மசாத், 2027 ஆம் ஆண்டுக்குள் AI தொழில்நுட்பம் காரணமாகப் பல வேலைகள் இல்லாமல் போகும் என்று தெரிவித்துள்ளார்.

உலகின் மிகவும் பிரபலமான பாட்காஸ்ட்களில் ஒன்றான (Steven Bartlett ) ஸ்டீவன் பார்ட்லெட்டின் The Diary of a CEO நேர்காணலில் பங்கேற்ற  ((Amjad Masad)) அம்ஜத் மசாத், வழக்கமான, மீண்டும் மீண்டும் வரும் கணினி பணிகளை நம்பியிருக்கும் எந்த வேலையும் மறைந்து போகும் விளிம்பில் உள்ளது என்று எச்சரித்துள்ளார்.

மளிகைச் சங்கிலிகள் முதல் தொழில்நுட்பக் கடைகள் வரை பல சில்லறை விற்பனைக் கடைகளில் சுயமாகச் சரிபார்ப்பு செய்யும் முறைகள் வழக்கமாகி வருகின்றன. AI தொழில்நுட்பத்துடன் கூடிய  வரி மென்பொருள்கள் பெருகி வருவதால், சட்ட ஒப்பந்தங்களைப் பகுப்பாய்வு செய்ய, நிதி அறிக்கைகளைத் தயாரிக்க, சிக்கலான ஆவணங்களை நொடிகளில் உருவாக்க, ஜெனரேட்டிவ் AI வந்து விட்டது. எனவே, காசாளர்கள், கணக்காளர்கள், வழக்கறிஞர்கள் ஆகிய ஒயிட்-காலர் எலைட் வேலைகளும் காணாமல் போகும்.

“Text In-Text Out” டெக்ஸ்ட் இன்-டெக்ஸ்ட் அவுட் வகையிலான டேட்டா என்ட்ரி மற்றும் தட்டச்சு, தர உறுதி சோதனை மற்றும் தரவைச் சரிபார்த்தல் போன்ற தொடர்ச்சியான செயல்கள் தேவைப்படும் எல்லா வேலைகளும் இனி இருக்காது என்று உறுதிப்படத் தெரிவித்துள்ள ((Amjad Masad)) அம்ஜத் மசாத், AI- ஆட்டோமேஷனுக்கு ஏற்ற எல்லா வேலைகளும் முதலில் அழிந்து போகும் என்று கூறியுள்ளார்

செயற்கை நுண்ணறிவின் பிதாமகன் என்று கருதப்படும் ஜெஃப்ரி ஹின்டனும்,  AI மனிதர்களிடமிருந்து கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ளக் கூடும் என்றும், AI-யின் அசுர வளர்ச்சி ஆபத்தின் அறிகுறி என்றும்  எச்சரித்துள்ளார்.

ஏற்கெனவே, மைக்ரோ சாஃப்ட் பில்கேட்ஸ், கூகுள் சுந்தர் பிச்சை, ஓபன்AI சாம் ஆல்ட்மன்  உள்ளிட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள், AI வளர்ச்சியடைந்து வரும் வேகம் மற்றும் அது செல்லும் திசை இரண்டையும் பற்றிய கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே, சர்வதேச அளவில் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் AI தொடர்பான வேலை வாய்ப்புகள் 21 சதவீதம் அதிகரித்துள்ளன. 2027ம் ஆண்டுக்குள் AI தொழில்நுட்பத் துறையில், 23 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று Bain & Company ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

மனித திறனுக்கும் இயந்திரத் திறனுக்கும் இடையிலான போட்டி வேகமடைந்து உள்ளது.  வேலை  பாதுகாப்பானதா என்பது மிக அவசரமான கேள்வி அல்ல. AI தொழில்நுட்பத்தால், எளிதில் பிரதிபலிக்க முடியாத திறன்களை வளர்த்துக் கொள்வதே இன்றைய தேவையாகும்.

Tags: AI technologyIs AI a blessing? A curse? : Jobs that will disappear in the next 2 years - Special CollectionAI வரமா? சாபமா?காணாமல் போகும் வேலைகள்
Share
Tweet
SendShare
Previous Post

ED அலுவலகத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடம் விசாரணை!

Next Post

கடும் விலை சரிவு : வாழ்வாதாரத்தை இழந்த இலவம் பஞ்சு விவசாயிகள்!

Related News

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

ஆட்டம் காட்டும் அமெரிக்கா : 100 % வரி மிரட்டல் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவில் ஹாஸ்பிடாலிட்டி துறையின் அடுத்தகட்ட வளர்ச்சி : பாரதி மெராகியின் Tier 2, Tier 3 நகரப் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies