இந்தியப் பாதுகாப்புத்துறைக்குக் கூடுதலாக 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆயுதங்கள் கொள்முதல் செய்யவும், பாதுகாப்புப்படையை மேம்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த கூடுதல் நிதி தொடர்பாக ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு 6.81 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.