பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, போலாரி தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு விமானமான ஏடபிள்யூஏசிஎஸ் அழிக்கப்பட்டதை பாகிஸ்தானின் முன்னாள் ஏர் மார்ஷல் மசூத் அக்தர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், இந்தியாவின் தாக்குதலில், பாகிஸ்தானின் ஏடபிள்யூஏசிஎஸ் விமானம் முற்றிலும் சேதமடைந்துள்ளது எனக் கூறினார்.
பாகிஸ்தானை தாக்க வரும் கப்பல்கள், விமானங்கள், ஏவுகணைகளை நீண்ட தூரத்திலேயே கண்டறிய ஏடபிள்யூஏசிஎஸ் கண்காணிப்பு விமானங்கள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.