புறநகரில் மாற்று வீடு : புறந்தள்ளப்படும் கரையோர மக்கள்!
May 18, 2025, 12:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புறநகரில் மாற்று வீடு : புறந்தள்ளப்படும் கரையோர மக்கள்!

Web Desk by Web Desk
May 17, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அடையாறு ஆற்றங்கரை பகுதி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் தமிழக அரசு, அவர்களுக்கான மாற்று வீடுகளைச் சென்னையின் புறநகர் பகுதியில் கட்டிக் கொடுத்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. அவரவர் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே மாற்று ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

சென்னையின் பிரதான நீர் வழித்தடமாக இருக்கும் அடையாற்றின் கரையோரப் பகுதியை ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கான குடும்பங்களை வெளியேற்றும் முயற்சியைத் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

அனகாபுத்தூர், சாந்தி காலனி, சைதாப்பேட்டை, மல்லிப்பூ நகர், அன்னை சத்யா நகர் என பல்வேறு பகுதிகளில் நடைபெறும் இப்பணிகளால் ஆண்டாண்டு காலமாக ஆற்றங்கரையோரத்தில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் படி ஆற்றங்கரையோரத்தில் இருக்கும் குடியிருப்புகள் அகற்றப்பட்டு அங்கு வசிக்கும் மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. அவ்வாறு வெளியேற்றப்படும் மக்களுக்கு மறுகுடியமர்வு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் வீடுகள் பெரும்பாக்கம், பெருங்குளத்தூர் போன்ற சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒதுக்கப்படுவதால் அங்குச் செல்வதில் தயக்கம் ஏற்பட்டுள்ளது.

பொதுவாகவே ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் ஒவ்வொரு வெள்ளப்பெருக்கின் போதும் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வரும் நிலையில், தேர்தல் நேரத்தின் போது வாக்குகள் கேட்க வரும் மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் முடிந்த பின்பு தங்களை மறந்து விடுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆற்றங்கரையோர மக்களை வெளியேற்ற வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவாக இருந்தாலும், தங்களை வெளியேற்றிவிட்டு தனியாருக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதற்கான அனுமதி வழங்க அரசு முயற்சிப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அடையாறு ஆற்றின் இருபுறங்களிலும் ஆபத்தான நிலைகளில் வசிக்கும் மக்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்திலேயே மாற்று வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

Tags: Alternative housing in the suburbs: Coastal people being evictedசென்னை அடையாறு ஆற்றங்கரை
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானுக்கு துணைநிற்கும் துருக்கி : துருக்கியை புறக்கணிக்கும் இந்திய மக்கள்!

Next Post

தேச நலனுக்கான நடவடிக்கை : துருக்கி நிறுவனத்தை கை கழுவிய இந்தியா!

Related News

பிரமித்த உலக நாடுகள் : இந்திய வானத்தின் கவசம் ஆகாஷ்தீர் – சிறப்பு கட்டுரை!

ஆப்ரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு இல்லை : IAEA மறுப்பு!

திருக்கோயிலா? குப்பை மேடா? : முகம் சுளிக்கும் பக்தர்கள்!

இனி கரண்ட் பில் “NO” : PM சூர்யோதய திட்டம் சலுகையோ சலுகை!

தேச நலனுக்கான நடவடிக்கை : துருக்கி நிறுவனத்தை கை கழுவிய இந்தியா!

பாகிஸ்தானுக்கு துணைநிற்கும் துருக்கி : துருக்கியை புறக்கணிக்கும் இந்திய மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

புறநகரில் மாற்று வீடு : புறந்தள்ளப்படும் கரையோர மக்கள்!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

உறையூரில் அமைச்சர் கே.என்.நேருவை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

2025-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3% இருக்கும் : ஐ. நா கணிப்பு!

ஆபரேஷன் சிந்தூரை பிரதமர் மோடி வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளார் : எல். முருகன் பெருமிதம்!

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விசாகனிடன் 2-வது நாளாக ED விசாரணை!

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு – பிற நாடுகளுக்கு விளக்க எம்பிக்கள் குழு அமைப்பு!

திடீர் தயாரிப்பாளர் பின்னணி : ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

கெலவரப்பள்ளி அணையிலிருந்து குவியல் குவியலாக செல்லும் ரசாயன நுரைகள் : விவசாயிகள் அதிர்ச்சி!

கனிமவள முறைகேடு – அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies