புறநகரில் மாற்று வீடு : புறந்தள்ளப்படும் கரையோர மக்கள்!
Sep 10, 2025, 10:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புறநகரில் மாற்று வீடு : புறந்தள்ளப்படும் கரையோர மக்கள்!

Web Desk by Web Desk
May 18, 2025, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அடையாறு ஆற்றங்கரை பகுதி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் தமிழக அரசு, அவர்களுக்கான மாற்று வீடுகளைச் சென்னையின் புறநகர் பகுதியில் கட்டிக் கொடுத்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. அவரவர் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே மாற்று ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

சென்னையின் பிரதான நீர் வழித்தடமாக இருக்கும் அடையாற்றின் கரையோரப் பகுதியை ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கான குடும்பங்களை வெளியேற்றும் முயற்சியைத் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

அனகாபுத்தூர், சாந்தி காலனி, சைதாப்பேட்டை, மல்லிப்பூ நகர், அன்னை சத்யா நகர் என பல்வேறு பகுதிகளில் நடைபெறும் இப்பணிகளால் ஆண்டாண்டு காலமாக ஆற்றங்கரையோரத்தில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் படி ஆற்றங்கரையோரத்தில் இருக்கும் குடியிருப்புகள் அகற்றப்பட்டு அங்கு வசிக்கும் மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. அவ்வாறு வெளியேற்றப்படும் மக்களுக்கு மறுகுடியமர்வு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் வீடுகள் பெரும்பாக்கம், பெருங்குளத்தூர் போன்ற சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒதுக்கப்படுவதால் அங்குச் செல்வதில் தயக்கம் ஏற்பட்டுள்ளது.

பொதுவாகவே ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் ஒவ்வொரு வெள்ளப்பெருக்கின் போதும் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வரும் நிலையில், தேர்தல் நேரத்தின் போது வாக்குகள் கேட்க வரும் மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் முடிந்த பின்பு தங்களை மறந்து விடுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆற்றங்கரையோர மக்களை வெளியேற்ற வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவாக இருந்தாலும், தங்களை வெளியேற்றிவிட்டு தனியாருக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதற்கான அனுமதி வழங்க அரசு முயற்சிப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அடையாறு ஆற்றின் இருபுறங்களிலும் ஆபத்தான நிலைகளில் வசிக்கும் மக்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்திலேயே மாற்று வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

Tags: Alternative housing in the suburbs: Coastal people being evictedசென்னை அடையாறு ஆற்றங்கரை
ShareTweetSendShare
Previous Post

திருக்கோயிலா? குப்பை மேடா? : முகம் சுளிக்கும் பக்தர்கள்!

Next Post

முதியவர்களை கொன்று நகைகளை கொள்ளையடித்த கும்பல் : 3 பேரை கைது செய்து விசாரணை!

Related News

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies