புறநகரில் மாற்று வீடு : புறந்தள்ளப்படும் கரையோர மக்கள்!
Jul 23, 2026, 06:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புறநகரில் மாற்று வீடு : புறந்தள்ளப்படும் கரையோர மக்கள்!

Murugesan M by Murugesan M
May 18, 2025, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அடையாறு ஆற்றங்கரை பகுதி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் தமிழக அரசு, அவர்களுக்கான மாற்று வீடுகளைச் சென்னையின் புறநகர் பகுதியில் கட்டிக் கொடுத்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. அவரவர் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே மாற்று ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

சென்னையின் பிரதான நீர் வழித்தடமாக இருக்கும் அடையாற்றின் கரையோரப் பகுதியை ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கான குடும்பங்களை வெளியேற்றும் முயற்சியைத் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

அனகாபுத்தூர், சாந்தி காலனி, சைதாப்பேட்டை, மல்லிப்பூ நகர், அன்னை சத்யா நகர் என பல்வேறு பகுதிகளில் நடைபெறும் இப்பணிகளால் ஆண்டாண்டு காலமாக ஆற்றங்கரையோரத்தில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் படி ஆற்றங்கரையோரத்தில் இருக்கும் குடியிருப்புகள் அகற்றப்பட்டு அங்கு வசிக்கும் மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. அவ்வாறு வெளியேற்றப்படும் மக்களுக்கு மறுகுடியமர்வு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் வீடுகள் பெரும்பாக்கம், பெருங்குளத்தூர் போன்ற சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒதுக்கப்படுவதால் அங்குச் செல்வதில் தயக்கம் ஏற்பட்டுள்ளது.

பொதுவாகவே ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் ஒவ்வொரு வெள்ளப்பெருக்கின் போதும் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வரும் நிலையில், தேர்தல் நேரத்தின் போது வாக்குகள் கேட்க வரும் மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் முடிந்த பின்பு தங்களை மறந்து விடுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆற்றங்கரையோர மக்களை வெளியேற்ற வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவாக இருந்தாலும், தங்களை வெளியேற்றிவிட்டு தனியாருக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதற்கான அனுமதி வழங்க அரசு முயற்சிப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அடையாறு ஆற்றின் இருபுறங்களிலும் ஆபத்தான நிலைகளில் வசிக்கும் மக்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்திலேயே மாற்று வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

Tags: Alternative housing in the suburbs: Coastal people being evictedசென்னை அடையாறு ஆற்றங்கரை
ShareTweetSendShare
Previous Post

திருக்கோயிலா? குப்பை மேடா? : முகம் சுளிக்கும் பக்தர்கள்!

Next Post

முதியவர்களை கொன்று நகைகளை கொள்ளையடித்த கும்பல் : 3 பேரை கைது செய்து விசாரணை!

Related News

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

கோவை தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழா – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் பங்கேற்பு!

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் வன்முறை – பொதுமக்கள், போலீசார் மீது தாக்குதல்!

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies