அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் சிறைச்சாலையிலிருந்து 10 கைதிகள் தப்பியோடினர்.
நியூ ஆர்லியன்ஸ் சிறைச்சாலையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்பட சுமார் 1,500 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள சில கைதிகள் நள்ளிரவு நேரம் கழிவறைக்குச் சென்றிருந்தனர்.
அதன்பின் கழிப்பறையின் பின்னால் உள்ள துளை வழியாக 10 கைதிகள் ஏறிக் குதித்துத் தப்பினர். விசாரணையின் பேரில் இதற்கு உடந்தையாகச் செயல்பட்ட 3 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.