இத்தாலி ஓபன் டென்னிஸில் அந்நாட்டின் வீராங்கனை ஜாஸ்மின் பாவ்லினி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளார்.
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் கோகோ காப், 5-ம் நிலை வீராங்கனையான ஜாஸ்மின் பாவ்லினியை எதிர்கொண்டார்.
1 மணி 29 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பாவ்லினி 6-4, 6-2 என்ற நேர் செட்டில் கோகோ காப்பை தோற்கடித்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
40 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலி வீராங்கனை ஒருவர் இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.