குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை - கொள்ளை!
Jan 14, 2026, 08:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

Murugesan M by Murugesan M
May 20, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வயதான முதியவர்களைக் குறிவைத்து கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தோட்டத்து இல்லத்தில் வசிக்கும் முதியவர்களை நோட்டமிட்டு அரங்கேற்றிய கொலைகள் குறித்தும், அதன் பின்னணி குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சேமலைக்கவுண்டன் புதூரில் உள்ள தோட்டத்து இல்லத்தில் வசித்து வந்த தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகிய மூவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டனர்.

அவர்களின் நகைகள் மற்றும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கின் குற்றவாளிகளைப் பிடிக்கப் பல தனிப்படைகள் அமைத்தும் அவர்களை நெருங்க முடியாமல் காவல்துறை திணறி வந்தது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த விளக்கேத்தி எனும் கிராமத்திலும் தோட்டத்து இல்லத்தில் வசித்து வந்த வயதான தம்பதியினர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொலை செய்யப்பட்டு, அவர்களின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அடுத்தடுத்து அரங்கேறிய இந்த இரு படுகொலைச் சம்பவங்களும் மேற்கு மண்டலத்தையே உலுக்கியது. சிவகிரி கொலை வழக்கை விசாரிக்கவும் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த கொலை வழக்கின் குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகத் தமிழக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.  வழக்கின் விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் சென்ற அரச்சலூரை சேர்ந்த மாதேஸ்வரன், ரமேஷ் மற்றும் அச்சியப்பன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் கொலைச்சம்பவங்களை அரங்கேற்றியவர்கள் இவர்கள் தான் என்பதும் கண்டறியப்பட்டது.

தொடர் கொலை வழக்கில் ஈடுபட்டவர்கள் ஏற்கனவே கடந்த  2015 ஆம் ஆண்டு பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு ஒன்பது மாதம் சிறையிலிருந்திருக்கிறார்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தோட்டத்தில் தேங்காய் உரிக்கும் வேலைக்குச் சென்று அங்குத் தனியாக வசிக்கும் முதியவர்களை நோட்டமிட்டு இரவு நேரத்தில் இல்லத்திற்குள் புகுந்து அவர்களைக் கொலை செய்துவிட்டு வீட்டிலிருக்கும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதைக் குற்றவாளிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர். கொள்ளையடித்த நகைகளை உருக்கிக் கொடுத்த நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் எழுமாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிபதியின் உத்தரவின் படி  வரும் ஜூன் 2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு, திருப்பூர் என மேற்கு மண்டலத்தில் அரங்கேறி வந்த தொடர் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அப்பகுதியில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களையும் அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பது ஓரளவுக்கு ஆறுதலைத் தந்திருக்கிறது.

Tags: திருப்பூர் மாவட்டம்Background behind the arrest of the criminals: Serial murders and robberies targeting the elderlyகொலை - கொள்ளை
ShareTweetSendShare
Previous Post

டாஸ்மாக் பொது மேலாளர், துணை பொது மேலாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

Next Post

நீதிபதி பணியில் சேர 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி கட்டாயம் : உச்சநீதிமன்றம் உத்தரவு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies