ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் வருடா வருடம் உயர்த்தப்பட்டு வரும் மின் கட்டணத்தால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
திறனற்ற திமுக ஆட்சியில் படாதபாடு பட்டுவரும் மக்கள், விலை ஏற்றத்தாலும், வரி உயர்வினாலும் வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டு வாழ வழி தெரியாமல் நிற்க வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தைக் கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டுக் கால சாதனை விமர்சித்துள்ள அவர், மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவைத் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.