தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறினார்.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னையில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தென்மேற்கு பருவமழை அடுத்த சில தினங்களில் வலுப்பெறும். மத்திய கிழக்கு அரபிக்கடலில் வரும் 21ம் தேதி வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக கூடும். இது, 22ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும் கூறினார்.