தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!
Jul 31, 2026, 12:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

Ramamoorthy S by Ramamoorthy S
May 20, 2025, 06:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், பேருந்து நிலையம், பாகலூர் சாலை சந்திப்பு, ராயக்கோட்டை சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மழைநீர் தேங்கியது. மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதிகளில்
பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக, இரட்டைக்கண் பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர். பாரூர் இந்திரா நகரில் தண்ணீர் வடியதால் நோய்தொற்று ஏற்படும் சூழல் நிலவுகிறது. மழைநீர் வடிகால் வசதி முறையாக மேற்கொள்ளாததே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார காலையில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும் சாலையோர வியாபாரிகளும் கடுமையாக சிரமத்திற்குள்ளாகினர்.

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட எள் மற்றும் உளுந்து பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில், வீரணம் ஏரியிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் வேதனை அடைந்த விவசாயிகள், பாசன வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததே இதற்கு காரணமென குற்றம்சாட்டினர்.

இதேபோன்று, தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் இடியுடன் கூடிய கனமழையால் சாலைகளில் வெள்ளம்போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். எனினும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் சாலைகளில் கழிவுநீரோடு சேர்ந்து மழைநீரும் ஓடியது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

கனமழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள ஆறு மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக மாங்கனி ஓடை ,சங்கிலி பாறை,வழுக்குப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நீர் வரத்தைப் பொறுத்தே சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: metrological centertamilnadu rainheavy rainrain alertweather updaterain warning
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Next Post

கொரோனா பரவல் குறித்து அச்சப்பட தேவையில்லை – மத்திய அரசு

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies