தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!
Apr 29, 2026, 06:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

Ramamoorthy S by Ramamoorthy S
May 20, 2025, 06:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், பேருந்து நிலையம், பாகலூர் சாலை சந்திப்பு, ராயக்கோட்டை சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மழைநீர் தேங்கியது. மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதிகளில்
பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக, இரட்டைக்கண் பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர். பாரூர் இந்திரா நகரில் தண்ணீர் வடியதால் நோய்தொற்று ஏற்படும் சூழல் நிலவுகிறது. மழைநீர் வடிகால் வசதி முறையாக மேற்கொள்ளாததே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார காலையில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும் சாலையோர வியாபாரிகளும் கடுமையாக சிரமத்திற்குள்ளாகினர்.

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட எள் மற்றும் உளுந்து பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில், வீரணம் ஏரியிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் வேதனை அடைந்த விவசாயிகள், பாசன வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததே இதற்கு காரணமென குற்றம்சாட்டினர்.

இதேபோன்று, தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் இடியுடன் கூடிய கனமழையால் சாலைகளில் வெள்ளம்போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். எனினும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் சாலைகளில் கழிவுநீரோடு சேர்ந்து மழைநீரும் ஓடியது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

கனமழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள ஆறு மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக மாங்கனி ஓடை ,சங்கிலி பாறை,வழுக்குப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நீர் வரத்தைப் பொறுத்தே சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: metrological centertamilnadu rainheavy rainrain alertweather updaterain warning
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Next Post

கொரோனா பரவல் குறித்து அச்சப்பட தேவையில்லை – மத்திய அரசு

Related News

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

இன்றைய தங்கம் விலை!

காங்கிரஸில் இணைந்தது தான் ஆபத்தான விஷயம் – ராகுலின் கேள்விக்கு மாணவி கொடுத்த பதில்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விஜய் – வேலுடன் விஸ்வரூப தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies