உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத்தில் வாடிக்கையாளருக்கு எச்சில் துப்பி முகத்தில் மசாஜ் செய்த சலூன் கடை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காசியாபாத்தின் தானாவில் உள்ள சலூன் கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் சென்றுள்ளார்.
அப்போது சலூன் ஊழியரான அர்ஷத் அலி என்பவர், வாடிக்கையாளர் கண்ணை மூடியதும் க்ரீம் மீது எச்சில் துப்பி அவருக்கு மசாஜ் செய்துள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில், இரு வேறு பிரிவுகளில் வழக்குப் பதிந்து அர்ஷத் அலியை போலீசார் கைது செய்தனர்.