வனத்துறை அலட்சியம் : வயிற்றில் குட்டியுடன் உயிரிழந்த யானை!
Mar 15, 2026, 04:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வனத்துறை அலட்சியம் : வயிற்றில் குட்டியுடன் உயிரிழந்த யானை!

Murugesan M by Murugesan M
May 21, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மருதமலை அருகே நோய்வாய்ப்பட்டு இறந்த யானையின் வயிற்றில் 15 மாத குட்டி யானை இருந்த சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யானை கருவுற்றதை கூட அறியாமல் மூன்று நாட்கள் வனத்துறையினர் வழங்கிய சிகிச்சை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சோமையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும்  குப்பைக் கழிவுகள் அனைத்தும் மலை அடி வாரத்தில் கொட்டப்படுகின்றன.

அவ்வாறு கொட்டப்படும் கழிவுகளையே உணவாக உண்டு வந்த பெண் யானை உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலை அடிவாரத்தில் குவிந்திருக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் எனப் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானைக்கு வனத்துறை சார்பாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஹைட்ரோ தெரபி சிகிச்சை, நரம்பு வழி சிகிச்சை உட்பட பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டதோடு, செயற்கை குளத்தை உருவாக்கி அதில் இறக்கிய ஒரு மணி நேரத்தில் சிகிச்சைப் பலனின்றி யானை உயிரிழந்தது.

யானையின் உடலுக்குள் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளே உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது. அதனைத் தமிழ் ஜனம் தொலைக்காட்சி நடத்திய கள ஆய்வும் உறுதிப்படுத்தியது.

இறந்த யானைக்கு நடைபெற்ற பிரதேப்பரிசோதனையில் மற்றொரு அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஏற்கனவே கருவுற்றிருந்த அந்த யானையின் உடலில் 15 மாத குட்டி யானை இருந்திருப்பது பிரேதப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

கருவுற்றிருப்பதைக் கூட அறியாமல் அந்த யானைக்குக் கடந்த மூன்று நாட்களாக வனத்துறையினர் சிகிச்சை அளித்திருப்பது விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது.

உடல்நலக்குறைவால் உயிரிழந்த யானையின் உடல்நிலையை முழுமையாகப் பரிசோதிக்காமல் சிகிச்சை வழங்கிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுக்கத் தொடங்கியுள்ளது.

Tags: யானையின் வயிற்றில் 15 மாத குட்டிForest Department negligence: Elephant dies with calf in stomachவனத்துறை அலட்சியம்வயிற்றில் குட்டியுடன் உயிரிழந்த யானைகோவை மருதமலை
ShareTweetSendShare
Previous Post

பாக்.கை தொடர்ந்து வங்கதேசம் : பிடியை இறுக்கும் இந்தியா – சீண்டினால் சிக்கல் உறுதி

Next Post

சூரிய ஒளி மருந்து தெளிப்பான் : பில்கேட்ஸ் வியந்து பாராட்டிய விவசாயி மகன்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies