வனத்துறை அலட்சியம் : வயிற்றில் குட்டியுடன் உயிரிழந்த யானை!
Jun 7, 2026, 09:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வனத்துறை அலட்சியம் : வயிற்றில் குட்டியுடன் உயிரிழந்த யானை!

Murugesan M by Murugesan M
May 21, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மருதமலை அருகே நோய்வாய்ப்பட்டு இறந்த யானையின் வயிற்றில் 15 மாத குட்டி யானை இருந்த சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யானை கருவுற்றதை கூட அறியாமல் மூன்று நாட்கள் வனத்துறையினர் வழங்கிய சிகிச்சை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சோமையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும்  குப்பைக் கழிவுகள் அனைத்தும் மலை அடி வாரத்தில் கொட்டப்படுகின்றன.

அவ்வாறு கொட்டப்படும் கழிவுகளையே உணவாக உண்டு வந்த பெண் யானை உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலை அடிவாரத்தில் குவிந்திருக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் எனப் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானைக்கு வனத்துறை சார்பாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஹைட்ரோ தெரபி சிகிச்சை, நரம்பு வழி சிகிச்சை உட்பட பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டதோடு, செயற்கை குளத்தை உருவாக்கி அதில் இறக்கிய ஒரு மணி நேரத்தில் சிகிச்சைப் பலனின்றி யானை உயிரிழந்தது.

யானையின் உடலுக்குள் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளே உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது. அதனைத் தமிழ் ஜனம் தொலைக்காட்சி நடத்திய கள ஆய்வும் உறுதிப்படுத்தியது.

இறந்த யானைக்கு நடைபெற்ற பிரதேப்பரிசோதனையில் மற்றொரு அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஏற்கனவே கருவுற்றிருந்த அந்த யானையின் உடலில் 15 மாத குட்டி யானை இருந்திருப்பது பிரேதப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

கருவுற்றிருப்பதைக் கூட அறியாமல் அந்த யானைக்குக் கடந்த மூன்று நாட்களாக வனத்துறையினர் சிகிச்சை அளித்திருப்பது விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது.

உடல்நலக்குறைவால் உயிரிழந்த யானையின் உடல்நிலையை முழுமையாகப் பரிசோதிக்காமல் சிகிச்சை வழங்கிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுக்கத் தொடங்கியுள்ளது.

Tags: யானையின் வயிற்றில் 15 மாத குட்டிForest Department negligence: Elephant dies with calf in stomachவனத்துறை அலட்சியம்வயிற்றில் குட்டியுடன் உயிரிழந்த யானைகோவை மருதமலை
ShareTweetSendShare
Previous Post

பாக்.கை தொடர்ந்து வங்கதேசம் : பிடியை இறுக்கும் இந்தியா – சீண்டினால் சிக்கல் உறுதி

Next Post

சூரிய ஒளி மருந்து தெளிப்பான் : பில்கேட்ஸ் வியந்து பாராட்டிய விவசாயி மகன்!

Related News

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ. 29 உயர்வு – சென்னையில் ரூ.928. 50க்கு விற்பனை!

கோவையை உலுக்கிய வழக்கு; போலீஸ் விசாரணை நிறைவு

சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் சுழற்சி முறையில் 2 மணி நேரம் வரை மின்தடை? பொதுமக்கள் அதிருப்தி!

செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்!

Su-57 போர் விமான திட்டம் : இந்தியாவுடன் இணைந்து உருவாக்க தயார் என புதின் அறிவிப்பு – சிறப்பு தொகுப்பு!

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறப்பாக செயல்பட்ட காவல் ஆளிநர்களுக்கு விருது – சென்னை மாநகர காவல் ஆணையர் வழங்கினார்!

திருப்பரங்குன்றத்தில் முந்தைய நடைமுறைப்படியே தீபம் ஏற்றப்படும் – அமைச்சர் நிர்மல்குமார் உறுதி!

இப்படி ஒரு கெட்ட மதியாளரை தூக்கி சுமந்தோமே – ராகுல் குறித்து திமுக விரக்தி!

இந்தியாவிற்கு எதிரான பொருளாதார தடைகள், பூமராங் போலத் திரும்பி வந்து தாக்கும் – ரஷ்ய அதிபர் புதின்

அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு – ஹர்தீப் சிங் பூரி வாழ்த்து!

இந்தியாவின் வளர்ச்சி வேகம் வலுவாக தொடர்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.7 சதவீதமாக உயர்வு!

அண்ணாமலையின் WE THE LEADER அமைப்பு – ஆர்வமுடன் இணையும் தன்னார்வலர்கள்!

ஆளுநர் உரையுடன் வரும்18-ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை!

கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடலாம் – உயர்நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies