சிக்கிமில் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.
நாம்ச்சி மாவட்டம் சமா்டுங் பகுதியில் நீா்மின் திட்ட சுரங்கப்பாதை கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. அங்கு திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏடிஐடி-3 என்ற சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது.
இதில், திட்ட அலுவலா்கள், தொழிலாளா்கள் என 25க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனா். உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அக்குடும்பத்தினருக்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு தலா 50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
















