சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டை அருகே சாலையில் பாய்ந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
சேலம் செவ்வாய்பேட்டை கோட்டை மெயின் ரோட்டில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியில் சாக்கடை கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பால் கழிவு நீர் சாலையில் ஓடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினர் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து பலமுறை புகாரளித்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.