ரூ.25 கோடி அம்போ : குப்பை மேடாக மாறிய சிட்லபாக்கம் ஏரி!
Mar 15, 2026, 09:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரூ.25 கோடி அம்போ : குப்பை மேடாக மாறிய சிட்லபாக்கம் ஏரி!

Murugesan M by Murugesan M
May 22, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

25 கோடி ரூபாய் மதிப்பில் அழகுபடுத்தப்பட்ட சிட்லபாக்கம் ஏரி தற்போது முறையான பராமரிப்பின்றி குப்பை மேடுகளாகக் காட்சியளிக்கிறது. ஏரியில் கலக்கும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தாம்பரம் மாநகராட்சியில் இருக்கும் 15 நீர்நிலைகளில் முக்கியமானதாக விளங்குகிறது இந்த சிட்லப்பாக்கம் ஏரி. மிகப்பெரிய பரப்பளவைக் கொண்டிருந்த இந்த ஏரி தற்போது ஆக்கிரமிப்பில் சிக்கி படிப்படியாகச் சுருங்கத் தொடங்கியுள்ளது.

ஏரியைச் சுற்றிலும் கொட்டப்படும் குப்பைகள் மலைபோல குவிந்திருப்பதோடு, ஏரியில் கலக்கும் கழிவுநீரால் அப்பகுதி நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு சுத்தமான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின் போது அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் முன்னெடுப்பில் சிட்லபாக்கம் ஏரியை மறுசீரமைக்க 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கின.

பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தபின்பு மந்தமான அப்பணிகள் பொதுமக்களின் போராட்டத்திற்குப் பின் நிறைவு பெற்றன. உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் நடைப்பயிற்சிக்காகப் பூங்காவைப் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது குவிந்திருக்கும் குப்பைகள் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கழிவுநீர் கால்வாயிலிருந்து எடுக்கப்பட்டு தரைப்பகுதியிலேயே கொட்டப்படும் கழிவுகளால் 25 கோடி ரூபாய் மதிப்பில் தூய்மையாக்கப்பட்ட ஏரி மீண்டும் அசுத்தமடையத் தொடங்கியுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்ட பூங்காவில் மக்களுக்குத் தேவையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.

தாம்பரம் பகுதி மக்களின் சிறந்த பொழுதுபோக்கு தளமாகவும், சுற்றுவட்டாரப் பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் சிட்லப்பாக்கம் ஏரி மற்றும் அதனை ஒட்டிய பூங்காவை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

Tags: Rs. 25 crore Ambo: Chitlapakkam lake turned into a garbage dumpரூ.25 கோடி அம்போகுப்பை மேடாக மாறிய சிட்லபாக்கம் ஏரி
ShareTweetSendShare
Previous Post

சூரிய ஒளி மருந்து தெளிப்பான் : பில்கேட்ஸ் வியந்து பாராட்டிய விவசாயி மகன்!

Next Post

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட 103 ரயில் நிலையங்கள் – இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies