ஐபிஎல் தொடரில், டில்லிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
ஐபிஎல் தொடரின் 63வது லீக் போட்டி மும்பை, டில்லி அணிகளுக்கு இடையே நடந்தது. வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற டில்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது.
181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டில்லி அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ரன்களே எடுத்தது. இதையடுத்து 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.