திருச்சி மாவட்டம் துறையூர் தனியார் மண்டபத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடந்தது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில் திமுக நிர்வாகியான மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன் நலத்திட்ட உதவிகள் வழங்கிய சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்ட ஊராட்சி குழு தலைவராக இருந்து தற்போது பதவிக் காலம் முடிந்த நிலையில் திமுக நிர்வாகி தர்மன் ராஜேந்திரன் அரசு நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.