பாமகவுக்கு நான் தான் - தலைவர்?
May 23, 2025, 11:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

பாமகவுக்கு நான் தான் – தலைவர்?

Web Desk by Web Desk
May 23, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாசுக்கு இடையே எழுந்திருக்கும் அதிகாரப்பிரச்னை கட்சி நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையிலான பிரச்சனை குறித்தும் பாமகவின் எதிர்காலம் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைச் சிறப்பாக எதிர்கொள்வதற்காக பாமகவின் தலைவராக நானே செயல்படுவேன் என்ற ராமதாஸின் அறிவிப்பில் தொடங்கிய பாமகவின் உட்கட்சி பிரச்சனை இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கிறது.

பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில் அவர் பதவியைப் பறிப்பதற்கான காரணம் என்ன என நிர்வாகிகள் சிலர் ராமதாஸிஸ்கு எதிராக எழுப்பிய கேள்வி உட்கட்சி பூசலை உச்சக்கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

இதற்கிடையில் தான் 12 ஆண்டுகளுக்குப் பின் வன்னியர் சங்கம் நடத்திய வன்னிய இளைஞர்கள் சித்திரை முழுநிலவு மாநாட்டின் குழுத்தலைவராக அன்புமணி நியமிக்கப்பட்டார். மாநாட்டிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்ற நிலையில் பாமகவின் உட்கட்சி பூசல் முடிவடைந்துவிட்டதாக எண்ணிய நிர்வாகிகளுக்கு அந்த மாநாட்டில் ராமதாஸ் பேசிய பேச்சு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கட்சி நிர்வாகிகள் குறித்தும் தொண்டர்கள் பற்றியும் ராமதாஸின் பேச்சு அன்புமணி ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

வன்னியர் சங்கம் நடத்திய முழுநிலவு மாநாட்டிற்குப் பின் அன்புமணியை மீண்டும் தலைவராக ராமதாஸ் அறிவிப்பார் என எதிர்பார்த்துக் காத்திருந்த தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது.

அதோடு மாநாட்டில் ஜி.கே மணியைப் பற்றி பெருமையாகப் பேசிய ராமதாஸ், அன்புமணியின் உழைப்பைப் பாராட்டத் தவறிவிட்டதாகவும் விமர்சனம் எழத் தொடங்கியது.   அந்த அதிருப்தியின் வெளிப்பாடே ராமதாஸ் நடத்திய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 90 சதவிகிதம் பேர் பங்கேற்காமல் புறக்கணித்ததற்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது.

ஏற்கனவே பாமக நடத்திய பொதுக்குழுவில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் பொறுப்பு ராமதாஸின் பேரன் முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்பட்ட போதே எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, நீலாங்கரையில் தனக்கென தனி அலுவலகம் திறந்திருப்பதாகவும், தன்னை சந்திக்க வரும் நிர்வாகிகள் அங்கு வந்து என்னைச் சந்திக்கலாம் எனவும் மேடையிலேயே பேசியிருந்தார். இந்த நிலையில் ராமதாஸ் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு அன்புமணி மட்டுமல்ல அவரின் ஆதரவாளர்களும் திட்டமிட்டே புறக்கணித்திருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பாமகவின் தலைவராகத் தன்னை அறிவிக்கும் வரை ராமதாஸ் நடத்தக் கூடிய கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என்பதில் அன்புமணி உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அன்புமணிக்கு ஆதரவாக 90 சதவிகிதத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் இருப்பதையும் அடுத்தடுத்த கூட்டங்கள் உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தந்தை, மகனுக்கும் இடையேயான பிரச்சனை கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடங்கி அடிமட்ட தொண்டர்கள் வரை பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற நேரத்தில் சிங்கத்தின் கால்கள் பழுதுபடவில்லை என்று  பேசுவதையும், நீச்சல் குளத்தில் நீச்சலடித்து தன் வீரத்தைக் காட்டுவது போன்ற காணொளிகளையும் வெளியிடுவதைத் தவிர்த்துவிட்டு கள யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அன்புமணியைத் தலைவராக அறிவிக்க முன்வர வேண்டும் என ராமதாஸுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தெரிவித்து வருகிறார்கள் பாமகவின் மூத்த நிர்வாகிகளும் அடிமட்டத் தொண்டர்களும்..!

Tags: பாமகpmktn politicsAm I the leader of the PMK?தலைவர்
ShareTweetSendShare
Previous Post

இந்தியா இல்லாவிட்டால் “NO LIFE” : தயவை நாடியிருக்கும் 12 நாடுகள்!

Next Post

11 மணி உதயநிதி : திமுகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்!

Related News

ஹார்வர்ட் Vs ட்ரம்ப் : சர்வதேச மாணவர்கள் சேர்க்கைக்கு செக்!

11 மணி உதயநிதி : திமுகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்!

இந்தியா இல்லாவிட்டால் “NO LIFE” : தயவை நாடியிருக்கும் 12 நாடுகள்!

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை : தெளிவுபடுத்திய ஜெய்சங்கர்!

ஆபரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானுக்கு இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு?

சுற்றுலாத்தலமாகுமா குமரிக்கல்? : புராதன சின்னங்களைஅழிக்கும் மின்திட்டத்தை கைவிட கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பாமகவுக்கு நான் தான் – தலைவர்?

தவியாய் தவிக்கும் மக்கள் : சுகாதார சீர்கேட்டால் சீரழியும் சுற்றுலா நகரம்!

வடகிழக்கு என்பது ஆற்றலின் சக்தி மையம் : பிரதமர் மோடி

எதுக்குன்னு தெரியுமா? : ஜிம்மில் குவியும் ZEN Z KIDS!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை உலகமே பாராட்டுகிறது – அமித்ஷா

தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்!

பெண் காவல் ஆய்வாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் : தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்!

கல்குவாரி விபத்தில் 6 பேர் பலி : மூவர் கைது!

ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ் ராவுக்கு சிறை தண்டனை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்த எம்.பிக்கள் குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies