சுற்றுலாத்தலமாகுமா குமரிக்கல்? : புராதன சின்னங்களைஅழிக்கும் மின்திட்டத்தை கைவிட கோரிக்கை!
May 24, 2025, 12:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சுற்றுலாத்தலமாகுமா குமரிக்கல்? : புராதன சின்னங்களைஅழிக்கும் மின்திட்டத்தை கைவிட கோரிக்கை!

Web Desk by Web Desk
May 23, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டத்தில் மூவாயிரம் ஆண்டுகள் நெருங்கியும் கம்பீரம் குறையாமல் நிற்கும் குமரிக்கல்லை சிறந்த சுற்றுலாத்தலமாக்க மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பாரம்பரிய புராதானச் சின்னங்களை அழிக்கும் மின்சாரத் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என எழுந்திருக்கும் கோரிக்கை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம், காவுத்தம்பாளையம் ஊராட்சியில் சுமார் மூவாயிரம் ஆண்டுகள் நெருங்கியும் கம்பீரம் குறையாமல் தமிழகத்தின் ஆன்மீக வரலாற்றைப் பறைசாற்றும் வரலாற்றுச் சின்னம் தான் இந்த குமரிக்கல். தரைக்குக் கீழே 15 அடியில் தொடங்கி தரைக்கு மேலே 32 அடி உயரத்தில் காட்சியளிக்கும் இந்த நடுகல்லை சுற்றியிருக்கும் கிராமங்களில் பானை ஓடுகள், முதுமக்கள் தாழி, இரும்புக் கசடுகள், தர்மச்சக்கரக்கல் என ஏராளமான பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் நிறைந்துள்ளன. அத்தகைய சிறப்புமிக்க இந்த இடத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்ட உயர்மின் கோபுர துணை மின் நிலையத்திட்டம் பொதுமக்களின் தொடர் போராட்டத்திற்குப் பின் கைவிடப்பட்டது.

தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வு செய்ய வேண்டிய குறிப்பிட இடங்களில் பிரதானமானதாகக் கூறப்படும் குமரிக்கல்லில் தொல்லியல் ஆய்வை உடனடியாக தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஆச்சரியங்களைக் கொண்டிருக்கும் குமரிக்கல் சுற்றுவட்டார மக்கள் வணங்கிப் பூஜிக்கும் தெய்வமாகவும் திகழ்கிறது.

ஆண்டுகள் பல ஆயிரம் கடந்தும் தமிழர்களின் வீரவரலாற்றை பறைசாற்றும் வகையில் அமைந்திருக்கும் இந்த குமரிக்கல்லின் சிறப்புகளை உலகமே அறியும் வகையில் அப்பகுதியைச் சுற்றுத்தளமாக மாற்ற வேண்டும் என அங்குள்ள மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாரம்பரியச் சின்னங்களை அழிக்கும் வகையில் கொண்டுவரப்படும் மின்சார துணைமின் நிலையத் திட்டத்தை நிரந்தரமாகக் கைவிடுவதோடு, சிவகங்கை மாவட்டம் கீழடியில் கிடைத்த பொக்கிசங்களைப் பழமை மாறாமல் சேகரித்து அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தியிருப்பதைப் போல குமரிக்கல்லையும் தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத்தலமாக்க மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags: Will Kumarikkal become a tourist destination?: Demand to abandon the power project that will destroy ancient monuments!சுற்றுலாத்தலமாகுமா குமரிக்கல்மின்திட்டத்தை கைவிட கோரிக்கை
ShareTweetSendShare
Previous Post

தவியாய் தவிக்கும் மக்கள் : சுகாதார சீர்கேட்டால் சீரழியும் சுற்றுலா நகரம்!

Next Post

ஆபரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானுக்கு இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு?

Related News

ஹார்வர்ட் Vs ட்ரம்ப் : சர்வதேச மாணவர்கள் சேர்க்கைக்கு செக்!

11 மணி உதயநிதி : திமுகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்!

பாமகவுக்கு நான் தான் – தலைவர்?

இந்தியா இல்லாவிட்டால் “NO LIFE” : தயவை நாடியிருக்கும் 12 நாடுகள்!

தவியாய் தவிக்கும் மக்கள் : சுகாதார சீர்கேட்டால் சீரழியும் சுற்றுலா நகரம்!

எதுக்குன்னு தெரியுமா? : ஜிம்மில் குவியும் ZEN Z KIDS!

Load More

அண்மைச் செய்திகள்

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை : தெளிவுபடுத்திய ஜெய்சங்கர்!

ஆபரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானுக்கு இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு?

சுற்றுலாத்தலமாகுமா குமரிக்கல்? : புராதன சின்னங்களைஅழிக்கும் மின்திட்டத்தை கைவிட கோரிக்கை!

வடகிழக்கு என்பது ஆற்றலின் சக்தி மையம் : பிரதமர் மோடி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை உலகமே பாராட்டுகிறது – அமித்ஷா

தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்!

பெண் காவல் ஆய்வாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் : தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்!

கல்குவாரி விபத்தில் 6 பேர் பலி : மூவர் கைது!

ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ் ராவுக்கு சிறை தண்டனை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்த எம்.பிக்கள் குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies